Pages

Wednesday 15 June, 2011

செருப்புக்காக காலை வெட்டிக்கொள்ளும் சீமான் கவலை! வெறும் சவலை!


பொருளாதார தடை விதிக்கச் சொன்னால் கப்பல் விடுவதா? - சீமான் பாய்ச்சல்




சென்னை: இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ள இந்த வேளையில், அதைக் கண்டு கொள்ளாமல் இலங்கைக்கு கப்பல் விட்டுள்ள இந்திய அரசின் செயல் கண்டிக்கத் தக்கது என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.


இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப் பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ள உணர்வு இந்தியாவுக்கு இல்லையே...

தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்தி விட்டது.

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.

தமிழரை அவமதித்த மத்திய அரசு

இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.

இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.
.........தட்ஸ் தமிழ் 14.06.2011
***************
பொது ஜனம்; என்னய்யா! இந்த "சீமான்" "லூசுத்தனமா" அறிக்கை விடுதே! அதுவும் பல "சீமாட்டிகளின் கற்பழிப்பு" புகார்களுக்கிடையேயும் இந்த அறிக்கை வெளியிடுதே!

பொது ஜனம்; ஒரு நடிகை தானே! கூட இன்னொரு நடிகையும் சேர்ந்துகிச்சு! அவ்வளவு தானே!

பொது ஜனம்; சீமாட்டிகளின் புகாரைப் புறந்தள்ளு! அது இன்னொரு "குண்டு சீமாட்டி" பாவம் இவரின் இலங்கைத் தமிழ்  பாசத்துக்காக அன்புடன் தந்த பரிசு!

பொது ஜனம்; இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? அங்கே வெறும் ராஜபக்சே மட்டுமா? வாழ்கிறார்? 

பொது ஜனம்; ஆமாய்யா! லூசுத்தனமாவும் இருக்கு! பசப்பு வேலையாவும் இருக்கு!

பொது ஜனம்; அங்கே இருக்கும் தமிழர்கள் பத்தியெல்லாம் சீமானுக்கு என்ன கவலையா? என்ன? 

பொது ஜனம்; ஒரு வேளை சீமானின் அறிக்கையை கேட்டு எல்லா இலங்கைத்தமிழர்களும் இலங்கை அரசில் இருந்து வேலையை விட்டு விடுவார்கள். அப்புறம் எல்லாரும் சீமான் தரும் நிதியை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்துவார்கள். 

பொது ஜனம்; அதுவும் இலங்கை அரசு வழியாத்தானே செல்லணும்? 

பொது ஜனம்; சரி! இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் நிதி தரும் அளவுக்கு அவ்வளவு பெரிய "சீமானா"? அங்கே வாழும் 35 லட்சம் தமழர்களுக்கும் நிதி அளித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி விடுவாரா?

பொது ஜனம்; பின்னே அவர் எவ்வளவு பற்றுடையவர்? தன்னுடைய சினிமா சம்பாதிப்பு சொத்து முழுவதையும் இலங்கை தமிழ் மக்களுக்காக வாரி இரைத்துவிட்டு வறுமையில் வாடக்கூடியவர் என்று அவரே சொல்லிக்கிறார்! அதனால் தான் இலங்கை மீது தைரியமாக பொருளாதார தடை விதிக்க சொல்றார்! அது ஒன்னும் விஷயம் தெரியாம சொல்லல! உனக்கு தான் விஷயம் தெரியலை!

பொது ஜனம்; எவ்வளவு நாளைக்கு அந்த பணம் பயன்படும்?

பொது ஜனம்; தெரியலை அவருக்குத்தான் அதை பத்தி தெரியும்? அதுக்கும் ஏதாவது திட்டம் வைத்திருப்பார்? மகா புத்தி சாலி!

பொது ஜனம்: அதை விடு! ஏதோ ஆர்வக்கோளாருலே பொருளாதார தடை! அது இதுன்னு வெளியிட்டிருக்கு! 

பொது ஜனம்;ராஜபக்க்ஷேவுக்கு, குற்றத்தில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்கணும், ஆட்சியை நீக்கணும் என்றால் நியாயம்! 

பொது ஜனம்;பொருளாதாரத் தடை விதித்தால் பாதிக்கப்படப்போவது மீண்டும் தமிழர்கள் தான்! அங்குள்ள பொது மக்கள் தான்! இது கூட "சீமான்"களுக்கு தெரியாதா?  வாய்தா "சீமாட்டி"களுக்கு தெரியலைன்னா அர்த்தம் உண்டு!

பொது ஜனம்; மத்த நாடுகள் சில குரல் கொடுத்திருக்கே!

பொது ஜனம்; அவங்களுக்கு! தமிழர்கள் மேல என்ன கரிசனம்! இலங்கை மேலே ஏதாதவது காண்டு இருக்கும்! அதை இந்த விஷயத்தை சாக்கா வைச்சி தீர்த்துக்கிறாங்க! நீ தமிழனா! இருந்து கொண்டு பொருளாதார தடையை அங்கே வாழுகின்ற தமிழ் மக்களுக்கு எதிராக விடுக்கறியே! 

பொது ஜனம்; கப்பல் போக்குவரத்துனாலே வணிகம் நடைபெற்று கொண்டு இருக்கும்! அதனால் ஈட்டப்படும் வருமானம் அந்த நாட்டுக்குப் போகும்! அது தமிழர்களின் வாழ்வுக்கும் சேர்த்து தான் பயன்படும்! 

பொது ஜனம்; ஆமாம்! அங்குள்ள அரசியல் வாதியின் செயலுக்காக அங்குள்ள தமிழ், சிங்கள மக்கள் பாதிக்கப்படக்கூடாது. செருப்புக்காக காலை வெட்டிக்க கூடாது.

.

No comments: