Pages

Friday 5 August, 2011

அ.தி.மு.க.வின் 34 வயது பள்ளி மாணவர் கொடுத்த பொய் கேஸ்!

   திரண்டு வந்த தி.மு.க.வினர்!


  புதிய ஆட்சி அமைந்து இரண்டரை மாதத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக இத்தனை வலிமையான ஒரு ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கட்சி நடத்தும் என்பதை இரு தரப்பையும் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களே எதிர்பார்க்கவில்லை.  பொய்யாக நில அபகரிப்பு வழக்குப் போடும் ஜெ. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் என தலைமைக்கழகம் அறிவித்தபோது, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறது கார்டன் வட்டாரம்.

     ''இந்தத் தேர்தலில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துகூட தி.மு.கவுக்குக் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ரொம்பவும் சோர்ந்து போயிருப்பார்கள் என்பதுதான் எங்கள் கணக்கு.  தினந்தோரும் பாயும் வழக்குகளால்  தி.மு.க.வினர் திக்குமுக்காடிப் போயிருப்பார்கள் என்றும், அதனால் போராட்டக் களத்திற்கு வருவதற்கே பயப்படுவார்கள் என்றும் நினைத்திருந்தோம்..  எங்களுடைய கணிப்பு, தமிழகம் முழுவதும் அதிகபட்சம் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் பேர்தான் போராட்டத்திற்கு வருவார்கள் என நினைத்தோம்.  எங்கள் கணக்குப் பொய்யாகிவிட்டது.'' என ரகசியமாக நம்மிடம் ஒப்புக்கொள்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.

     ஆகஸ்டு 1-ந் தேதி வடசென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மற்ற மாவட்டங்களில் மா.செக்கள்-முன்னணியினர் தலைமையிலும் நடந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காத போதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர்.  தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கைது செய்ய வேண்டிய போலீசார், போதிய வாகன வசதி இல்லாமல் பெயருக்கு சில உ.பி.க்களை மட்டும் கைது செய்ய மற்ற உ.பி.க்களோ போலீஸ் வாகனங்களை மறித்து, 'ஒட்டுமொத்தமாக கைது செய்... கணக்கை குறைத்துக்காட்டி ஜெ.விடம் பெயர் வாங்க நினைக்காதே' என்று தமிழகமெங்கும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தபடியே இருந்தனர்.

     ஒவ்வொரு மாவட்டத்திலும் 70, 80 வயது நிறைந்த கட்சியின் சீனியர்கள் பலரும் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  கட்சியின் மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட பல அணிகளைச் சேர்ந்தவர்களும், தடையை மீறி வந்து கைதானபடியே இருந்தார்கள்.  கைது எண்ணிக்கை போலீஸ் கணக்குப்படியே 50 ஆயிரத்தைத் தாண்ட, அவர்களை அடைத்து வைக்க தமிழக சிறைகளில் இடமில்லை என்பதால் அனைவரையும் விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

      வெற்றிகரமான போராட்டத்தை தி.மு.க. நடத்தி முடித்திருக்கும் நிலையில், நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக பொதுமக்களிடம் எழும் கேள்விகளை தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளரும், முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவிடம் முன் வைத்தோம்.  சட்டத்தை சுட்டிக்காட்டி, விரிவாக பேசத்தொடங்கிறார் ஜின்னா.


     * நில அபகரிப்பு விவகாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட தி.மு.க.வினர் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது அரசு.  இது சரியான நடவடிக்கைதான் என்று மக்களிடம் பரவிலாக ஒரு கருத்து எதிரொலிக்கறதே?

      இது பொய் வழக்குதான் என்பதை தலைவர் கலைஞரும், தளபதியும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  பிறகெப்படி இது சரியான நடவடிக்கை என்றால் சட்டத்தின் மீதும் உண்மையின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் சிரிப்பார்கள்.  யார் வேண்டுமானாலும் யார் மீதும் காவல்துறையிடம் புகார்  கொடுக்கலாம்.  கொடுத்து வடவும் முடியும்.  ஆனால் அந்த புகாரினை முறைப்படி விசாரித்து அதில் உண்மையிருக்கும் பட்சத்தில்தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.  அதுதான் சட்டப்படியான வழிமுறை.  ஆனால் தமிழக காவல்துறை தற்போது அப்படித்தான் செயல்படுகிறதா?  புகார்கள் உண்மைதானா என்று விசாரித்து அறிந்து கொள்ளாமலே கைது செய்கிறார்கள்.  இது சட்டப்படி தவறானது.  பொதுவாக குற்றவாளியைத்தான் போலீஸார் வலைவீசித் தேடுவார்கள்.  புகார்தாரார்களை வலைவீசிப் பிடித்துக்கொண்டிருக்கிறது போலீஸ்.  தி.மு.க.வினரில் யாரைப்பிடித்து உள்ளே போட அரசு நினைக்கிறதோ, அதற்கேற்ப புகார்தாரர்களைப் பிடித்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள்.  அல்லது இவர்களே எழுதிக்கொண்டு அவர்களிடம் கையெழுத்து மட்டும் வாங்கி கொள்கிறார்கள்.  இதைத்தான் போலீஸ் செய்து கொண்டிருக்கிறது.  பிரதமர் மீதும், முதல்வர் மீதும் ஒருவர் புகார் தந்தால் அதை பதிவு செய்துவிடுவார்களா?  புகார் வந்துடுச்சே... அதன் உண்மைத் தன்மையை விசாரிக்கத் தேவையில்லை என்று நினைத்து அவர்களை கைது நடவடிக்கை எடுத்துவிடுவார்களா?

     *   நில விவகாரத்தில் மிரட்டல், அடி உதை என இறங்கியிருப்பதால்தான் கிரிமினல் வழ்க்காக மாறுகிறது என்கிறார்களே?

      நம்ம போலீஸார்தான் ரொம்ப திறமைசாலிகள்.  அதனால் சிவில் வழக்குகளுக்கு கிரிமினல் சாயம் பூசி கிரிமினல் வழக்குகளாக மாற்றி எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள்.  அதாவது... ஒரு சொத்து தொடர்பாக இரண்டு பேருக்குள் தகராறு எனில், இதில் யாருக்கு எதிராக வழக்கு போடணும் என்று முடிவு செய்து கொண்டுவிட்டு மற்றொருவரிடம் 'இவர் என்னை மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டுவிட்டார்.  அல்லது எனது நிலம் தொடர்பாக போர்ஜரி டாகுமெண்டுகளை தயாரித்து என் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறார்' என்று புகார் வாங்கிக்கொள்வார்கள் காவல்துறையினர்.  மிரட்டல், போர்ஜரி டாகுமெண்ட் என்கிற வார்த்தைகள் இடம் பெற்று விட்டாலே அது கிரிமினல் வழக்காக மாறிவிடுகிறது.  சிவில் வழக்குகளை, கிரிமினல் வழக்காக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று பல வழக்குகளில் காவல்துறையினரை எச்சரிக்கை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த உத்தரவையெல்லாம் காவல்துறை எங்கே மதிக்கிறது?  இப்படி காவல்துறையினர் நடந்துகொள்வதால்தான்... இரண்டு பேருக்கும் இடையில் சுமூகமாக நடந்து முடிந்திருக்கும் நில விவாகாரம் கூட இப்போ புகாராக போலீஸ் ஸ்டேஷன் போகிறது.  அதாவது... 5 வருடத்துக்கு முன்பு ஒருவரிடமிருந்து 10 லட்சத்துக்கு ஒரு நிலத்தை இன்னொருவர் வாங்கிக் கொள்கிறார்.  அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 20 லட்சமாக மாறியிருக்கும் உடனே நிலத்தை விற்றவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒடோடிப்போய், ' என் நிலத்தை இவர் மிரட்டி அபகரித்துக்கொண்டார்' என்று புகார் தெரிவிக்கிறார்.  அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு தருவோம் என்று அரசு அறிவித்த அறிவிப்பால் இப்படிப்பட்ட புகார்கள் தான் அதிகரித்து வருகிறது. 


       *   எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன.  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது என்று வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லிவரும் நிலையில், தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்படவில்லை என்கிறாரே ஜெயலலிதா?

     ஜெயலலிதா அரசு போட்டு வருவது பொய் வழக்குகள்தான் என்பதை பொதுக்கூட்டத்திலும் ஆர்பாட்டத்திலும் தளபதி விவரித்திருக்கிறார்.  திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரை கைது செய்துள்ளது போலீஸ்.  பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார்கள்.  சரி... பாஸ்கர் தனது புகாரில் என்ன சொல்லியிருக்கிறார்?  அந்த புகாரில், 'என் பையன் தனிராஜா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.  பள்ளிக்குள் தி.மு.க. மா.செ. கலைவாணன் தலைமையில் ஒரு கும்பல் வெறித்தனமாக கூச்சல் போட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தது.  அவர்களின் வெறித்தனத்தை பார்த்ததும் நாங்கள் அசம்பாவிதம் நடக்குமோ! என பயந்து நாங்கள் வெளியே ஒடி வந்துவிட்டோம். எங்களது கல்வி இவர்களால் பாதிக்கப்பட்டது.  மாணவர்கள் படிப்பையும் எனது படிப்பையும் பாதிக்கச் செய்து, அத்துமீறி நடந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று பாஸ்கரன் பெயரில் புகார் உள்ளது.  பையனும், தானும் அந்தப் பள்ளியில் படிப்பதாக புகார் தெரிவிக்கறது.  பையன் ஒன்பதாம் வகுப்பு படிப்பதால் பாஸ்கருக்கு குறைந்த பட்சம் 34 வயதிருக்கலாம்.  34 வயதில் பள்ளி மாணவராக ஒருவர் இருக்க முடியுமா?  ஆக, இதை சாதரணமாக பார்த்தாலே புகாரை போலீஸாரே எழுதிக்கொண்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லையா?  அதே போல, தென் சென்னை மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.  இதில் புகார்தார் டுமலை சீனிவாசன் என்பவர்.  ஜூலை 18-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.பிரவேஷ்குமார், ஒரு நூற்பாலை மோசடி (12.50 கோடி) தொடர்பாக உடுமலை சீனிவாசன் என்பவரை தேடி வருகிறோம் என்றும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவிக்கிறார்.  இது நாளிதழ்களிலும் செய்தியாகியிருக்கிறது.  அந்த சீடிவாசன்தான் ஜூலை 28-ந் தேதி திருப்பூரில் அன்பழகனுக்கு எதிராக புகார் கொடுக்கிறார்.  நாமக்கல் எஸ்.பி. யால் தேடப்படும் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்ட சீனிவாசனை, திருப்பூர் போலீஸார் கைது செய்யாமல் அவரிடம் புகார் எப்படி வாங்கினார்கள்?  இந்த இரண்டு உதாரணங்களை வைத்து பார்த்தாலே... பொய்வழக்குகள் என்பது புரிய வருகிறதுதானே!  பொய் வழக்கு போடவில்லை என்கிற ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு புகார் வந்ததே... தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்வதுபோல உடனே அதை பதிவு செய்து அக்ரியை கைது செய்திருக்க வேண்டியது தானே?  அப்படிச் செய்திருந்தால் தானே தி.மு.க.வினர் மீது பொய் வழக்குப் போடவில்லை என்பது நிரூபணமாகும்.  இப்பொழுது மக்களுக்குத் தெரிந்துவிட்டதே... பழிவாங்கும் செயல்தான் என்று.  அதனால்தானே, தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவுடன் பெரும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

---சந்திப்பு : ஆர்.இளையசெல்வன்..நக்கீரன் 2011 ஆக. 03-05

*******************
பொது ஜனம்; அ.தி.மு.க. கட்சிக்காரங்க எல்லாம் 30 வயசுக்கு மேலதான் பள்ளிக்கூடத்துக்கே படிக்கப் போவாங்க போல இருக்கே! 

பொது ஜனம்; சரி, அந்த வயசுல  கூடவா சமச்சீர் கல்வியைப் பத்தி தெரியாம ''அம்மா'' கிட்ட ''ங்கா'' குடிச்சுகிட்டு இருப்பாங்க! கருமம் யா!

பொது ஜனம்;போராட்டத்துனால கல்வி பாதிக்கப்பட்டதுன்னு 34 வயது அ.தி.மு.க குழந்தை ரொம்பக் கவலைப்படுதே! 

பொது ஜனம்;அ.தி.மு.க. குண்டு அம்மாவின் சம்ச்சீர் கல்வி தடை சட்டத்தால ஒன்னேகால் கோடி,  குழந்தைங்க, கல்வி கிடைக்காமப் பாதிக்கப்பட்டு இருக்காங்களே! இத்தாப் பெரிய  (34 வந்து) குழந்தைக்கு இது கூடத் தெரியலையே?

சொத்து குவிப்பு வழக்கிற்கு 108 முறை வாய்தா வாங்கி ஜெயலலிதா சாதனை!

    
 வழக்கின் தீர்ப்பு! டென்ஷனில் ஜெ!

  திமுகவினர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பாய்கின்றன.  இதை ஒரு தீவிர அஜெண்டாவாக அ.தி.மு.க. அரசு  மேற்கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையை ஒரே ஒரு வழக்கு ரொம்பவும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.  அது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.  வழக்கை இழுத்தடிப்பதற்கான பல உத்திகளை ஜெ.வின் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட போதும், வழக்கு விசாரணையின் வேகத்தைக் கண்டு  மிரண்டுதான் போயிருக்கிறத, போயஸ் கார்டன்.

     சொத்து குவிப்பு வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை,  2005 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் 108 முறை வாய்தா வாங்கியிருக்கிறது, ஜெ.தரப்பு.  தற்போது இந்த வழக்கு வேகம் எடுத்திருப்பதால் அதைத் தடுப்பதற்கு ஏதாவது கட்டை போடவேண்டும் என்ற முடிவோடு, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் புலனாய்வு செய்யவேண்டும் என தமிழகத் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி மூலம் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.

     2001-2006 ஜெ. ஆட்சிக்காலத்திலும் இப்படித்தான் இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது என்பதால், தி.மு.க. பொதுச்செயலாளர் போராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார்.  அந்த மனுவின் டஇப்படையில், இந்த வழக்கை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டும் என உத்தரவிட்டது., உச்சநீதிமன்றம்.  அத்துடன், சிறப்பு நீதிமன்ற நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நியமிக்க உத்தரவிட்டது.  தற்போதைய புதிய ஜெ. ஆட்சியிலும் வ.ழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகள் ஆரம்பமானதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார்.

        குற்றவாளியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் அரசும் ஒன்றே என்ற காரணத்தால், வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இப்போதும், அதேபோல, முடியும் நிலையில் உள்ள இந்த வழக்கைத் தாமதப்படுத்தவும் குற்றவாளி தப்பிப்பதற்கு ஏதுவாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருப்பது நீதிமன்றத்தின் அலுவலில் தலையிடுவதாக இருக்கிறது.  தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.  அதை ரத்து செய்ய வேண்டும, என்று போராசிரியரின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


      ஜூலை 29-ந் தேதியன்று வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜெகந்நாதன், 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக மாநிலமும்-கர்நாடகத் தலைமை நீதிபதியும் சேர்ந்து நியமித்த சிறப்பு நீதிமன்ற அரசு வழ்க்கறிஞர் ஆச்சாரியாவைத் தவிர வேறு யாரும் இந்த வழக்கில் தலையிடக்கூடாது.  உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கால தாமதமின்றி நடத்த உத்தரவிட்டுள்ளது.  உங்களது (தமிழக அரசின்) தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவுப்படி, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீது நீங்கள் எந்த மறு விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது.

      இந்த வழக்கு விசாரணை முடியும்வரை எந்த விசாரணையையும் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தக் கூடாது.  தலைமைச் செயலாளர் பிறப்பித்த மறுவிசாரணை உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பித்து ஆணையிடுகிறேன்' எனத் தீர்ப்பு வழங்கினார்.

      'கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை இழுத்தடிக்க நினைத்த ஜெ.வின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது' என்கிற சட்ட வல்லுநர்கள், 'இனி இந்த வழக்கு மேலும் விரைவாகச் செல்லும்.  ஜெயலலிதா 313 ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்' என்கிறார்கள்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட அதே நாளில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுடன் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சசிகலாவும், இளவரசியும் ஆஜரானார்கள்.  குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு கையில் அடிபட்டுவிட்டதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பு வக்கீல், கோர்ட்டில் தெரிவித்தார்.

      சசிகலாவும், இளவரசியும் கோர்ட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  அவர்கள் ரொம்பவும் களைப்புடன் பொறுமை இழந்தும் காணப்பட்டார்கள் என்கிறார்கள், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள்.  ஜெ. சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் 313 ஸ்டேட்மெண்டுக்காக நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் 313/5 பிரிவின்படி கேள்விகளுக்குப் பதில் எழுதியோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஸ்டேட்மெண்ட் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணையை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.

       சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே விசாரணை நடைமுறைகள் உள்ளன, என்பதைச் சுட்டிக்காட்டும் சட்ட வல்லுநர்கள், 313 ஸ்டேட்மெண்ட் தொடர்பான வழ்க்கமான நடைமுறையைப் பின்பற்றவேண்டும், என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.

      இந்நிலையில், ஆகஸ்டு 1-ந் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, 8-ந் தேதிதக்கு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி.  நேரில்  ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய தனது மனு மீதான உத்தரவு தள்ளிப்போனதில் ஜெ. மிகவும் டென்ஷனாக இருக்கிறார் என்கிறது கார்டன் வட்டாரம்.  தனது வழக்கறிஞர் டீமிடம்,  ''என்ன செய்வீர்களோ தெரியாது, 'நான் ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகமாட்டேன்.  தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவேண்டும்'' என சீரியஸான குரலில் சொல்லியிருக்கிறாராம் ஜெ.

--நமது நிருபர், நக்கீரன்..2011 ஆக. 03-05
*********************

பொது ஜனம்; இதுக்குத்தான் லோக்பால் மசோதாவுல புரிதமரை சேர்க்கத்தேவையில்லை என்று ரொம்ப அக்கறையா சொல்லுச்சா! இந்த பதவியை வைச்சே கேஸ்ல எஸ்கேப் ஆவலாம் என்பதற்காகவா! 


பொது ஜனம்; இதுங்க! இதுமாதிரி தன்னோட வழக்கில எஸ்கேப் ஆயிட்டேயிருக்கும் என்பதால தான், லோக்பால் மசோதாவில பிரதமரையும் சேர்க்க சொல்றாங்க! மக்கள்!

பொது ஜனம்; இந்த லட்சணத்துல இது எல்லோர் மேலேயும் பொய் கேஸ் வேற போடுது! நிஜக் கேசுல குற்றவாளியே பயப்படாம இருக்கும்போது பொய்க் கேசுக்கு யாராவது பயப்படுவாங்களா!

பொது ஜனம்; இப்பவாவது நீதிமன்றம் விரைவா ஒரு நல்ல தீர்ப்பு தரணும்! இந்த பொம்பளைக்கு கடுமையான தண்டனையைத் தரணும்!



Thursday 4 August, 2011

எங்க மகன் சாவுக்கு ஜெ.அரசு தான் காரணம்!...மாணவனின் பெற்றோர் குமுறல்.

     
 மாணவன் சாவில் அரசியல்! ஸ்டாலின் தடாலடி கைது பின்னணி!

னியன்று காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் பரவ ஆரம்பித்தது.  செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். களிலும் 'மு.க.ஸ்டாலினைக் கைது பண்ணிட்டாங்களாமே?' என்ற பதன்ன விசாரணைகள் அங்கங்கே நடக்க.... தொலைக்காட்சி சேனங்களும் 'திருவாரூர் அருகே ஸ்டாலினை அதிரடியாக சுற்றி வளைத்து போலீஸ் கைது செய்தது' என ஸ்கோரல் செய்திகளை வெளியிடத்தொட்ங்கின.  இது பதட்டத்தின் டெஸிபல்ஸை மேலும் தீவிரமாக்கக், கொந்தளித்துப்போன தி.மு.க தொண்டர்கள் அங்கங்கே சாலை மறியலிலும் பஸ் மறியலிலும் குதித்தனர்.  பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.  புதுவை மாநிலத்திலும் அனலான அனல்.
     திருவாரூரில் என்ன நடந்தது?
          பலரிடமும் பலதரப்பிடமும் பேசி நாம் திரட்டிய தகவல் கீழே, 

29-ந் தேதி இரவு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் 30-ந் தேதி காலை தஞ்சையில் இருந்து தன் விசிட்டை ஆரம்பித்த்தார்.  அவரோடு டி.ஆர்.பாலு எம்.பி.,  மத்திய மந்திரி பழனி மாணிக்கம், திருவாரூர் மா.செ.பூண்டி கலைவாணன், மாஜி மந்திரி மதிவாணன், அழகு.திருநாவுக்கரசு போன்றோர் அணிவகுத்தனர்.  திருத்துறைப்பூண்டியில்  மறைந்த கட்சித் தொண்டர் மொழிப்போர் தியாகி பஷீர் முகமதுவின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, மாலையில் மன்னார்குடி தி.மு.க. பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதுதான் அவரது பயணத்திட்டம்.


     இதற்கிடையே சமச்சீர் கல்வி போராட்டத்தால் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் சக மாணவர்களோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த விஜய் என்ற 12 வயது கொரடாச்சேரி ஆரசு பள்ளி மாணவன், பேருந்து விபத்தில் சிக்கி இறந்திருந்ததால், வழியில் கிளரியம் கிராமத்தில் இருக்கும் விஜய்யின் வீட்டிற்கும் துக்கம் விசாரிக்கச் சென்றார் ஸ்டாலின்.  அது சி.பி.எம. தோழர்களின் இல்லம். 


மாணவனின் பெற்றோரான சேகரும் அமுதாவும் 'ஐயா, விபத்து நடந்த உடனே உங்க மாவட்ட செயலாளர்தான் ஸ்பாட்டுக்கு வந்தார்.  காயம் பட்டவங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வச்சார்.  இருந்தும் எங்க விஜய்யைக் காப்பாத்த முடியலை.  கூடவே இருந்து எல்லா உதவியும் செஞ்சதோட, மாவட்ட தி.மு.க சார்பில் 50 ஆயிரம் ரூபாயை எங்களுக்குக் கொடுத்துட்டுதான் கிளம்பினார் உங்க மாவட்டம்" என்று அந்த நிலையிலும் நெகிழ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஸ்டாலின்.

     அங்கிருந்து திருவாரூர் வழியாக திருத்துறைப்பூண்டிக்குப் போய்க்கொண்டிருந்த ஸ்டாலினின் கான்வாயை ஆலத்தம்பாடி அருகே, ஆக்ஷன் படங்களில் வருவது போல் சர்...புர்... என சீறிவந்த போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன.  அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சரசரவென குதித்தனர்.  இதைக்கண்டு ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் திகைத்துப்போக...

      போலீஸ் டீம் ஸ்டாலின் காருக்குள் பார்வையால் துழாவியது? ஸ்டாலினோ, நாங்க என்ன தீவிரவாதிகளா?  உங்களுக்கு என்ன வேணும்?' என்றார்.  போலீஸ் டீமோ 'உங்க மா.செ.வை அழைச்சிட்டுப்ப்போக வந்திருக்கோம்' என்றது.  'என்னவழக்கில் விசாரிக்கப்போறீங்க?' என்று ஸ்டாலின் கேட்க அதற்கு பதில் இல்லை.  'சரி காரை எடுங்கப்பா நாம போவோம்' என்று ஸ்டாலின் கிளம்ப... குபுக்கென ஒரு போலீஸ் வேன் ரோட்டை மறித்து நின்றது.  ஸ்டாலினோடு இருந்த மா.செ.பூண்டி கலைவாணனை பிடித்து இழுக்க ஆரம்பித்தனர்.  டென்ஷனான ஸ்டாலின் தன் காரில் இருந்து  இறங்கி 'எஃப்.ஐ.ஆர். காப்பி இருக்கா? வாரண்ட் இருக்கா?  காட்டுங்க, நாங்களே கலைவாணனை அனுப்பி வைக்கிறோம்' என்று சொல்ல, போலீஸோ எங்களிடம் கலைவாணனை ஒப்படையுங்கள் என்றனர் உறிதியாக.


     ஸ்டாலினோ 'இது அராஜகம்' என்று மறியலில் இறங்க... காவல்துறை அதிகாரிகளோ, 'எல்லோரையும் கைது செய்கிறோம்' என்றனர்.  உடனே ஸ்டாலின், கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர் எல்லோரும் அந்த வேனில் ஏறினர்.  போலீஸோ, அரைமணி நேரத்தில் வரவேண்டிய திருவாரூருக்கு நான்கு மணிநேரம் ஊர்வலமாக ஸ்டாலினை அழைத்து வந்தனர்.  பின்னர் கலைவாணனை மட்டும் தங்கள் வசம் வைத்துக்கொண்டு ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் மதியம் 2 மணிக்கு விடுவித்து விட்டார்கள்.  கைது டீமில் இருந்த ஒரு காக்கி ''எப்படியாவது கலைவாணனைக் கைது செய்துடணும்னு எங்களுக்கு உத்தரவு வந்தது.  விபத்தில் இறந்த மாணவனின் குடும்பத்தார், அவன் படித்த பள்ளியின் ஆசிரியர்கள்னு பலர்ட்ட புகார் கேட்டும் எல்லோரும் பொய்ப்புகார் தரமாட்டோம்னு மறுத்துட்டாங்க.  கடைசியா அ.தி.மு.க.காரரான பெருமாளகரம் டீக்கடை பாஸ்கரனிடம், புகாரை எழுதி வாங்கினாங்க.  கலைவாணனின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டும் வேலையும் நடக்குது.  அவர்மீது குண்டாஸ் கூட பாயலாம்'' என்றார் கிசுகிசுப்பாக.

     கலைவாணன் மீது புகார் கொடுத்த அ.தி.மு.க. பாஸ்கரனோ 'எங்க மா.செ. காமராஜ் சொல்லாம நான் யார்ட்டேயும் வாய்திறக்க மாட்டேன் என்றார்.

      தஞ்சை சரக டி.ஐ.ஜி ரவிக்குமாரோ ''பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கலைவாணனை தேடினோம்....  ஸ்டாலினுடன் அவர் இருப்பதாக தகவல் வந்தது.  மடக்கி கைது செய்யப்போனோம்.  அப்ப ஸ்டாலின் எங்களையும் கைது பண்ணுங்கன்னு சொன்னார்.  உங்கமேல் புகார் இல்லைன்னு மறுத்தோம்.  ஆனா அவரா போலீஸ் வேனில் ஏறிக்கிட்டு வந்தார்'' என்றார்.

     விபத்தில் இறந்த மாணவன் விஜய்யின்  பெற்றோரான சேகரையும் அமுதாவையும் சந்தித்தோம்.  கண்ணீருடன் பேசிய அவர்கள் ''எங்க விஜய் சாவுக்கு இந்த அரசு தான் காரணம்.  சாலையில் இருக்கும் பள்ளத்தால் தினசிரி இங்கே விபத்து நடக்குது.  அதனால் தான் எங்க பிள்ளையைப்  பறிகொடுத்திருக்கோம் என்றார்கள் தேம்பலுடன்.

     விஜய்யின் பள்ளிக்கூட நண்பர்களான சந்துருவும், செல்வமும் ''எந்த பஸ்ஸூம் எங்க ஊர்ல நிக்கமாட்டேங்குது.  பூண்டி பஸ் மட்டும் தான் நிற்கும்.  அந்த பஸ்லதான் எங்களை செக்கர் ஏத்திவிட்டார்.  ரோட்டுப் பள்ளத்தில் பஸ் நொடிச்சப்ப எதிர்ல வந்த லாரியில் எங்க பஸ் மோதிடிச்சி.  அதில் விஜய் மட்டும் கீழே விழுந்து அடிபட்டு இறந்துட்டான்.  பஸ்ல போறதுக்கே பயமா இருக்குண்ணே'' என்கிறார்கள்.  அந்த விபத்தை வைத்து அரசு நட்த்தும் அரசியல் விளையாட்டுக்களை அறியாதவர்களாய்...


     போகிற போக்கைப் பார்த்தால் 'உங்கள் கம்பெனியில் நீங்கள் வேலை கொடுத்ததால் தான் அவர் வேலைக்கு வந்தார்.  வழியில் விபத்தில் இறந்தார்' என்றபடி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் ஜெ.போலீஸ்.  எச்சரிக்கை.


---செல்வகுமார், பகத்சிங். நக்கீரன் 2011 ஆக 03-05

*************************

பொது ஜனம்; இந்த ஜெயலலிதா ஏன்? ஆட்சிக்கு  வந்த இரண்டு மாசமா தி.மு.க வையே  சொறிஞ்சிக்கினு இருக்குது!

பொது ஜனம்; இப்ப அதுதான் தலைபோற விஷயம் அதுக்கு? மத்ததையெல்லாம் பத்தி அதுக்கு என்ன கவலை? தமிழக  மாணவர்களின்  பாடப்புத்தகத்தை டார்...டாரா கிழிச்சு நாசமாக்கிட்டுது. இப்ப தி.மு.க வை கிழிக்கப்பார்க்குது.

பொது ஜனம்; கிழிக்கப்பாக்குதா? இல்லை மக்களிடையே பாப்புலாரிட்டியத் தேடிக் கொடுக்குதா?

பொது ஜனம்; இந்த அறிவுக்கூடவா அதுக்கு இல்லை!

பொது ஜனம்; நாட்டில பட்டப்பகல்ல வீடு புகுந்து தினம் தினம் கொலை, கொள்ளை பண்ணிகிட்டு இருக்கானுங்க! அவனுங்க ஒருத்தனையும் பிடிக்க மாட்டேங்குதே!

பொது ஜனம்; ஆமாய்யா! தினம் 50 சவரன், 100 சவரன் -ன்னு மானாவாரியாக் கொள்ளை நடக்குது. ஆளையும் பட்டப்பகல்ல காலி பண்ணிடறாங்க! பொம்பளைங்க பகல்லேயே நடமாட முடியலே!


பொது ஜனம்; ஒரு பகுதியில கொள்ளை நடந்தா, அடுத்து அந்த பகுதியில கொள்ளை நடக்க கொஞ்ச நாளாகும்! ஆனா ஜெயலலிதா ஆட்சியில, கொள்ளைக்காங்க பயப்படாம தொடர் கொள்ளைகளா! தினம் தினம் கொலை, கொள்ளை பண்ணிகிட்டு இருக்கானுங்களே! அவனுங்களை இந்த போலீஸ் பிடிக்காதா? இல்லை கொள்ளைக்காரனுங்க கூட போலீஸ் கூட்டுநாட்டு வைச்சிருக்குதா!

பொது ஜனம்; நடக்கிறதா பார்த்தா போலீஸ் திருடன்களோட கூட்டுநாட்டி வைச்சிருக்கிற மாதிரிதான் தெரியுது!

பொதுஜனம்; ஜெயலலிதா இந்த நாட்டிற்கு வந்த ஒரு சாபக்கேடு!